காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறைச்சாலை அமைந்துள்ள சுமார் 4 ஏக்கர் நிலம் மிக அதிக வணிக மதிப்பைக் கொண்டுள்ள நிலையில், அதனை காலி நகரத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகின்றது.
எதிர்காலத்தில், சிறையில் உள்ள கைதிகளை நீதிமன்றத்திற்குச் அழைத்துச் செல்வதை நிறுத்திவிடுவார்கள் என்றும் இனி வழக்கு விசாரணைகள் டிஜிட்டல் முறையில் செய்யப்படும்.
எனவே, சிறைச்சாலை சற்று தொலைவில் இருப்பதால் பெரிய பிரச்சனை இல்லை என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Tags
இலங்கை
